×

சென்னையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்களத்தில் 2000 பணியாளர்கள்; 300 தூர்வாரும் இயந்திரங்கள்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் கனமழை பெய்து வருவதை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மற்றும் 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 2000 களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 327 கழிவுநீர் உந்து நிலையங்களும் எவ்வித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567, 1916 (கட்டணமில்லா தொலைபேசி எண்) மூலம் தெரிவிக்கலாம்.

The post சென்னையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்களத்தில் 2000 பணியாளர்கள்; 300 தூர்வாரும் இயந்திரங்கள்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Drinking Water Board ,Chennai, Chennai ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...